search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொய் பிரசாரம்"

    • சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மல்லல் கிராமத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழித்தடத்தில் போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்து அரசு நிதியை கையாடல் செய்ததாக சமூக வலைதளங்களில் விஷமிகளால் பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு சட்டப்படி தக்க பதிலடி கொடுப்போம் என்று தி.மு.க திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் க.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பு ல்லாணி ஒன்றியம் மல்லல் கிராமத்தி லிருந்து ஆலங்கு ளம் செல்லும் வழித் தடத்தில் 2022-23-ம் நிதி யாண்டில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பா ட்டு நிதியி லிருந்து ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் செலவில் சாலை அமைப்பதற்காக திட்ட மிடப்பட்டது.

    பல்வேறு அலுவல் காரணமாக அந்த பணியானது தொடர்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த சூழலில் பணிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பணி செயல் கல்வெட்டினை அந்தப் பகுதியில் அமைத்து மறைத்து வைத்திருந்த நிலையில் மறைப்பை நீக்கிவிட்டு விஷமிகள் சிலர் அதனை படம் எடுத்து போடாத சாலைக்கு போட்டதாக போர்டு வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பணிக்கான அடிப்படை ஒப்பந்தம் மட்டுமே பெறப்பட்டுள்ளதோடு பணிக்கான செலவினத் தொகை ஏதும் எடுக்கவோ, விடுவிக்கப்படவோ இல்லாத நிலையில் அலுவல் பிரச்சினை காரணமாகவே இந்த சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது குறித்து தவறான தகவல் களை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தன்னுடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாலை பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக தெற்கு மல்லல் கிராமத் தலைவர் பொ.செல்லக் கருங்கு கூறிய தாவது:-

    சம்பந்தப் பட்ட வழித் தடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்பது தங்களு டைய நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் எடுத்து ரைத்ததோடு,அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த இருந்தார். இந்த சூழலில் அவருடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்ததாகவும்,சாலை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் நாங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அளந்து கொடுக்கிறோம் பிறகு சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலேயே தற்காலிகமாக அந்த சாலை பணியானது நிறுத்தப்பட்டது.

    அதற்கிடையில் தி.மு.க அரசுக்கும், எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராம லிங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கில் சிலர் தவறாக சித்தரித்து சமூக வலை தளங்களில் பரப்பி யுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உதயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடி வருகிறார். விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆதரவு என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகி விட்டது.
    • தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்தங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்

    பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராம நாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வந்தார். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து அவரை ஊர்வ லமாக அழைத்துச் சென்று நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024பாராளு மன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தாமரையில் வெற்றிபெறும் வகையில் மாநில தலைவர அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி பாடுபட்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் ஊழலை, அராஜக போக்கை எதிர்த்து பா.ஜ.க. போராடி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. ஆதரவு நிலை என்பது தவிடுபொடியாகிவிட்டது. தி.மு.க. அரசு தொடர்ந்து ஊழலை செய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஸ்லிம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளோம். போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது.

    தி.மு.க. அரசு ஆளுநரை இழிவு படுத்த முடிவு செய்து விட்டது. தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்த ங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காவல்துறை மூலம் பா.ஜ.க.வினர் மீது அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு அதிர்ச்சியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சிவராம கிருஷ்ணன், எம்.சி.ரமேஷ் ராணுவ அணிசெந்தூ 

    • பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை கேரளா நடத்தி வருகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் தென் மாவட்ட உயிர்நாடி பிரச்சினையில் மக்களின் உரிமையை காக்க அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியை யாராலும் மறுக்க முடியாது. முல்லைப் பெரியாரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களுக்கும், பாசனத்திற்கும் குடிநீரையும் நம்பி உள்ளனர்.

    தற்போது கேரளா முல்லைப் பெரியாறுக்கு எதிராக ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதனால் அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கேரளா முல்லை பெரியாறுக்கு எதிராக ஏற்கனவே ஆவணப்படம் எடுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல் செய்ய இணைய வழி கையெழுத்து இயக்கத்தை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தற்போது அணையில் நீர்மட்டம் 127 அடிக்கு மேல் உள்ளது. பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அணையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று உறுதி செய்துள்ளனர். கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் கேரளாவில் உள்ள அரசியல் இயக்கங்கள் சார்பில் பெரியாறு அணைக்கு எதிராக கேரளா பிரசாரம் செய்து வருகிறது. தொழில் நுட்ப வல்லுனர் குழு, கண்காணிப்பு குழு ஆய்வு செய்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் இந்த சர்ச்சை வருவது வேதனை அளிக்கிறது.

    குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆவணப்படம் எடுக்க சமூக வலைதளத்தில் நிதி வசூல் செய்வது மட்டுமல்லாது கேரள நடிகர்களும் அணைக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் தென் மாவட்ட விவசாயிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.கேரளாவின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான விளக்கங்களை நாம் சொல்ல வேண்டும்.

    கேரளா, முல்லைப்பெரியாறுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் . இது இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உரிமையைநிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×